×

திண்டிவனத்தில் குட்கா பொருட்கள் வைத்திருந்த முதியவர் கைது

திண்டிவனம் :  திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே நேற்று காலை திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த முதியவரை சோதனை செய்ததில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் திண்டிவனம் கோட்டைமேடு செந்தமிழ் நகரை சேர்ந்த தேவதாஸ் (67) என்பதும் கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. முதியவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமார் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Ddivanam , Tindivanam: Tindivanam Indira Gandhi bus stand near the Tindivanam police station yesterday morning Assistant Inspector Anandarasan and
× RELATED திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில்...