திருவள்ளூர்: போரூர் காரம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் யுகேஜி மாணவி அனன்யாஸ்ரீ பல்வேறு மொழிப் பாடல்களை பாடிக்கொண்டே அபாகஸ் மனக்கணக்கு உத்தியை பயன்படுத்தி 75 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்கு தொகைகளை தீர்த்து உலகின் தலைசிறந்த இளம் மேதையாக தன்னை நிரூபித்துள்ளார். இதன்மூலம் இந்த இளம் மேதை ராபா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து வேலம்மாள் பள்ளி நிர்வாகம் அவரது அசாதாரண கணித திறன்களை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது.
இவ்விழாவில் அவர் இளம் மேதை என்று முடிசூட்டப்பட்டார். மேலும் அவரது அற்புதமான சாதனைக்கு பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.