கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. முந்திரி தோப்பில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்நாதனின் 4வயது மகன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.