சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஊர்தி இடம்பெற வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாபு முறையீடு செய்தார். மனுதாக்கல் நடைமுறை முடிந்தால் திங்கள்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.