×

போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு

அண்ணாநகர், அக்.18: அண்ணாநகர் பகுதியை சேர்ந்த காவலர் அருண் (36), நேற்று அதிகாலை 5 மணிக்கு, வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். சிறிது தூரம் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அருண் மீது மோதுவது போல் அருகில் வந்து பயம் காட்டி, அவரது கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து காவலர் அருண் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Arun ,
× RELATED அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை...