சென்னை: தமிழக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளத்தாகவும், சென்னையில் நகரின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஜனவரி 22 வரை 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.