சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாள்காட்டி, திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகமும் வெளியிட்டார். திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் குரல் ஒப்புவித்த மாணவர்களுக்கு முதலமைச்சர் பரிசு வழங்கினார்.