×

இலங்கை நீதிமன்றம் விடுவித்த ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் தமிழகம் வந்தனர்

சென்னை:  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் உள்பட 9 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் டிசம்பர் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 9 பேரையும் விடுதலை செய்தது. இதையடுத்து 9 மீனவர்களும் இலங்கையில் இருந்து ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை வந்தனர்.

Tags : Ramanathapuram ,Tamil Nadu , 9 Ramanathapuram fishermen released by Sri Lankan court have returned to Tamil Nadu
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...