சென்னை: பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றி உள்ளோம். மக்களிடம் பல மடங்கு நம்பிக்கையை திமுக அரசு பெற்றுள்ளது என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உங்களின் அரசாக மட்டுமல்லாமல் உயிர் காக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம் என முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது எனவும் முதல்வர் கூறினார்.