×

விருதுநகரில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் மூன்று லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Tags : Virudhunagar ,Chief Minister ,MK Stalin , mk stalin
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...