×

அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல் பட்டாசு விபத்துகளை தடுக்க தனிக்குழு மூலம் கண்காணிப்பு

ெசன்னை: பட்டாசு விபத்துகளை தடுக்க தனிக்குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijaykanth , Government, Vijayakand, Fireworks Accident, Private
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...