×

தமிழகத்தில் 1,594 பேருக்கு கொரோனா: ஒமிக்ரானில் இருந்து 98 பேர் குணமாகினர்

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,02,029 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 1,594 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,51,128 ஆக உள்ளது.  நேற்று கொரோனாவில் இருந்து 624 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா  பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27,05,034 ஆக  உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர்  நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 776 பேரும்,  செங்கல்பட்டில் 146 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில்  இதுவரை 121 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளர். நேற்று வரை ஒமிக்ரான் வைரசில் இருந்து குணமடைந்து 98 பேர் வீடு திரும்பியுள்ளர். தற்போது 20 பேர் ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Tamil Nadu ,Omigran , Tamil Nadu, Corona, Omigron,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...