சென்னை: தரவுகளின் அடிப்படையிலேயே மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுகிறோம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் நேற்று 10 கி.மீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.