சென்னை: புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று எனக்கு நேரில் வாழ்த்து சொல்லுவதை தவிருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.