சென்னை: தமிழகத்தில் நேற்று 730 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 728 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது 6,654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 614 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,02,588 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல் கோவையில் 78, செங்கல்பட்டு 64, ஈரோடு 34, திருப்பூர் 24 பேருக்கும் தொற்று பதிவாகியது. மேலும் தமிழகத்தில் இதுவரை 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.