சென்னை: ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மநீம சார்பில் நேற்று வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில்,‘முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் (அதிமுக அமைச்சர்கள்) அடிக்கடி ரெய்டு நடக்கிறது. ஊழலால் சொத்து குவித்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அரசு தன்னை நிரூபிக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.