×

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை,திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Thiruvallur ,Tamil Nadu ,Weather Study Centre , Tamil Nadu, Chennai, Tiruvallur, Chance of rain, Meteorological Center
× RELATED மே 1 முதல் 4 வரை வெயில் உச்சத்தை தொட...