சென்னை: மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
திறம்பாட வந்த மறவன்!
அறம்பாட வந்த அறிஞன்!
படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று!
தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.