திருவனந்தபுரம்: சபரிமலையியல் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.