கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்தல், ஒரு நாளைக்கு ஒரு தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வேளாண் பல்கலைக்கழக சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.