சேலம்: சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி, முள்ளுவாடி கேட் அருகே டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் அளித்த புகாரில், தனது தாய் ராஜலட்சுமியிடம் இருந்து தந்தை விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருடன்(46) தாய் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து துன்புறுத்துகிறார். தாயும் உடந்தையாக உள்ளார். வெளியே சொன்னால் ெகாலை செய்வதாக மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார்.
இதையடுத்து, அந்த மாணவியை சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜெயக்குமார் பெரம்பலூரில் வேளாண்மை துறை அதிகாரியாக பணியாற்றுவதும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜலட்சுமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.