×

திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை

*மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பயங்கரம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் டாஸ்மாக் கடை எதிரே காட்டுப்பகுதியில் குடிபோதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்செந்தூர் – தூத்துக்குடி மெயின் ரோட்டில் அடைக்கலாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு எதிர்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவ்வழியாக ெசன்றவர்கள் பார்த்து போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலில் பல இடங்களில் கல்லாலும், கம்பாலும் அடித்தும், காலால் தாக்கியதற்கான தடயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து கந்தசாமிபுரம் விஏஓ நாகார்ஜூன், திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் ஆழ்வார்கற்குளம், கீழத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் அழகுமுத்து (33) கட்டிட தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ஆறுமுகநேரி பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அழகுமுத்து ஒரு கும்பலுடன் காட்டுப்பகுதியில் மது குடித்துள்ளார்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி உடன் வந்தவர்கள் அவரை கம்பாலும், கல்லாலும் தாக்கியதில் அழகுமுத்து உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.இதையடுத்து அழகுமுத்துவுடன் வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Adikalapuram Tasmac ,Adikalapuram ,Tuticorin ,road ,
× RELATED திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!