சென்னை: அதிமுக தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். தடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.