டெல்லி : கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார். காற்றுமாசு அதிகம் இருக்கும் போது, எதற்காக பள்ளிகளை திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேட்டதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.