சென்னை: அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு, வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடலோர பகுதி இடையே வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களில் கடலோர ஆந்திரம், யானம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.