கோவை: கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவை வடக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.