×

சட்டவிரோதமாக பாலியல் தொழில்!: சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் ஒரேநேரத்தில் 150க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உரிய அனுமதியின்றி செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணாநகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் இதுவரை 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பாலியல் தொழில் நடத்துபவருக்கு விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனையிட்ட லஞ்சஒழிப்பு துறையினர், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். இதன் எதிரொலியாகவும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். 


Tags : Chennai , Sex, spa, massage center, 6 women arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...