×

மாவட்ட தலைநகரங்களில் 26ம் தேதி விவசாயிகள் பேரணி

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில துணை தலைவர் ரவீந்திரன் தலைமையில் நேற்று இணையவழியில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியை சுற்றி பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டம் வரும் 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. அதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பேரணிகளை நடத்திட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

மின்சார திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும். இது குறித்து பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதை வலியுறுத்தி, நவம்பர் 26ம் தேதி தமிழ்நாட்டில் மாவட்ட தலை நகரங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடத்திட திட்டமிட்டுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்பது என்று மாநிலக்குழு தீர்மானிக்கிறது.  நடவு செய்து அழிந்து போன பயிர்கள், மற்றும் தோட்டக்கலை பயிர்கள், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கும் இழப்பீடு வழங்க முன்வர வேண்டுமென்று மாநிலக்குழு கோருகிறது.



Tags : Farmers' Rally ,District Capitals , District Capitals, Farmers Rally, State Vice President
× RELATED டெல்லியில் விவசாயிகளின் பேரணி...