சிம்லா: சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என சிம்லாவில் நடைபெறும் சபாநாயகர் மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கோப்புகளை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பு மரபு இருந்தும் ஆளுநர்கள் அதை செய்வதில்லை என அப்பாவு கூறியுள்ளார். அரசியல் சாசன அட்டவணை 10-ன் படி சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை ஏற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துளளார்.