கம்பாலா: உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டது. சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ள அங்கு சென்றிருந்த தமிழ்நாட்டு வீரர்கள் அடங்கிய இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இரு சக்கரவாகனத்தில் வந்த தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய அணிக்கு பாதிப்பு இல்லை; வீரர்கள் பத்திரமாக இருப்பதாக பயிற்சியாளர் தகவல் தெரிவித்தனர்.