சென்னை: நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., செல்வப்பெருந்தகை, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உட்பட பலர் உடன் இருந்தனர்.