×

வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: அடையாறு ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கரை உடைப்பு

சென்னை: தர்மபுரம் அடுத்த தர்கா சாலை சமத்துவ பெரியார் நகரில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அடையாறு ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தர்மபுரம், பெருங்குளத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 23 செ.மீ-க்கு அதிகமாக கன மழை பெய்தது. இதனால் மணிமங்கலம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட காஞ்சிபுரம் ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டமான நந்திவரம், கூடுவாஞ்சேரி மற்றும் ஆதனூர் ஏரிகள் நிரம்பி அடையாறு கால்வாய் வழியாக வழிந்தோடி வருகிறது. இதனால் 5-வது நாளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடையாறு ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது.        


Tags : Adyar river , Floods due to northeast monsoon: Breakage of banks in various parts of Adyar river
× RELATED அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி...