சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 10, 11ம் தேதிகளில் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.