×

அம்பத்தூர் ஏரியில் படகில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கி தொழிலாளி பலி

சென்னை: அம்பத்தூர், மகாகவி பாரதி நகர், கம்பர் தெருவை சேர்ந்த மீனவவர் ஸ்ரீதர்(39).இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஸ்ரீதர் அம்பத்தூர் ஏரியில் படகில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அந்த நேரத்தில், இவரை திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது. இதில், இவர் படகிலிருந்து ஏரிக்குள் தண்ணீரில் விழுந்துள்ளார். பின்னர், அவர் தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடன் சென்ற சக தொழிலாளி கமலகண்ணன் என்பவர் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகு,  உறவினர்கள் ஏரியில் இறங்கி ஸ்ரீதரின் சடலத்தை கைப்பற்றி உள்ளனர். பின்னர், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Ambattur Lake , Worker struck by lightning while fishing on a boat in Ambattur Lake
× RELATED அம்பத்தூர் ஏரியில் டன்கணக்கில்...