×

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறப்பு

சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது. செம்மரம்பக்கம் ஏரியில் நீர் திறக்கப்படுவதால் குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.30 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடியில் 2,934 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.


Tags : Lake Crescent , Heavy rainfall, Sembarambakkam Lake, Irrigation, Increase
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல்...