×

திருவாரூர் மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது

திருவாரூர்: திருவாரூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாய் - சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் நோயாளிகள் அவதியுற்றுள்ளனர். திருவாரூரில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வாக உள்ள பகுதிகளில் தண்ணீர் சூழ தொடங்கியுள்ளது. திருவாரூரில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவாரூர் நகர் பகுதிகளில் உள்ள விஜயபுரம் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் அங்கு வரும் நோயாளிகள் செல்வதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மருத்துவமனை உட்புறம் உள்ள  வார்டுகளிலும் தண்ணீர் புகுந்தது. இந்த தண்ணீரை அகற்றுவதற்கு தற்போது நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் மற்றும் கழிவு நீர் கலந்து வருவதால் மருத்துவமனையில் நோய் பரவும் சூழல் உள்ளது. தொடந்து மழை பெய்தால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விளைநிலங்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Tiruarur Hospital , Rain, Thiruvarur, Hospital
× RELATED வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட்...