×

டிபன் கடை பெண் தற்கொலையில் மர்மம்: நீலாங்கரை தலைமை காவலர் சிறைபிடிப்பு: கணவர், உறவினர்கள் கைது செய்ய வலியுறுத்தல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் டிபன் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனான நீலாங்கரை தலைமை காவலை, அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிறைபிடித்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டமும் நடத்திய சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.  சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி(27). இவரது கணவர் கபில்தேவ். இவர்களுக்கு, கவி(11) என்ற மகளும், சாய் விகாஷ்(5) என்ற மகனும் உள்ளனர். விக்னேஸ்வரி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் டிபன் கடை நடத்தி வந்தார். அப்போது, நீலாங்கரை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகிலன்(42) அறிமுகமானார். ஒரே பகுதி என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஸ்வரி தனது கணவர் கபில்தேவ்வை கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரிந்து, தனியாக வசித்து வருகிறார்.

விக்னேஸ்வரி நடத்தும் டிபன் கடையையே தலைமை காவலர் முகிலன் தான் வைத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு முகிலன், விக்னேஸ்வரி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விக்னேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை காவலர் முகிலன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், விக்னேஸ்வரியை சோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி விரைந்து வந்த போலீசார் விக்னேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை ெசய்யும்போது, ஒரே வீட்டில் தலைமை காவலர் முகிலன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்ட விக்னேஸ்வரியின் கணவன் கபில்தேவ் மற்றும் அவரது உறவினர்கள் முகிலன் வீட்டின் முன்பு குவிந்து அவரை சிறை பிடித்தனர். மேலும் தனது மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளதாக கபில்தேவ் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி தற்கொலையின்போது அதே வீட்டில் விக்னேஸ்வரியுடன் முகிலன் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் போலீசார் தலைமை காவலரான முகிலனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Dipan ,Nilangarai ,Chief Constable , Police, investigation
× RELATED தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல்...