புதுக்கோட்டை: இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் கோட்டைப்பட்டினம் வந்தடைந்தது. இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவரின் உடல் கோட்டைப்பட்டினம் வந்து சேர்ந்தது. கடந்த 18ம் தேதி விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர் ராஜ்கிரண் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மீனவர் ராஜ்கிரண் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்தினார்.