சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றடைந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார். மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களிலும் சசிகலா மரியாதை செலுத்துகிறார். சசிகலா வருகையையொட்டி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.