திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னாவை தடுப்பு காவலில் வைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற அமர்வு ஸ்வப்னாவின் தாயார் மனுவை விசாரித்து தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தூதரக அலுவலகம் மூலமாக துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கத்தை கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.