×

வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: பிரதான குழாய்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை சுற்று பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு, நெடுஞ்சாலைத் துறையால் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் சென்னை காவல் ஆணையர் அலுலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.

 இப்பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பகுதி 5க்குட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக, பகுதி பொறியாளர் - 5 என்பவரை 8144930905 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vaipari ,Chintadripet , Vepery, Chintadripet, Drinking Water Supply, Board
× RELATED சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர்...