×

பெரியாரிய தொண்டர் ராசகிரி தங்கராசு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பெரியாரிய தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திராவிடர் கழகத்தின் மேனாள் செயலவை தலைவரும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான பெரியாரியப் பெருந்தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு நேற்று இரவு மறைந்தார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலந்தொட்டு தற்போதுவரை திராவிடர் கழகத்தின் முக்கிய தூண்களுள் ஒருவராக விளங்கியவர்.

சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைசென்ற கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தவர். பெருவாழ்வு வாழ்ந்து பெரியாரிய தொண்டாற்றிய அவர் மூப்பின் காரணமாக நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.  திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரான ராசகிரி கோ.தங்கராசுவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


Tags : MK Stalin ,Periyar ,Rajagiri Thangaraj , Periyar, Rasagiri Thangaraj, MK Stalin, condolences
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...