சென்னை: திராவிடர் கழக மேனாள் செயலவை தலைவர் ராசகிரி கோ.தங்கராசு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெரியார், மணியம்மையார் காலந்தொட்டு தற்போது வரை திராவிடர் கழகத்தின் முக்கிய தூண்களுள் ஒருவராக விளங்கியவர். சட்ட எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று கொள்கை குன்றாக திகழ்ந்தவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.