×

கோவை ஏர்போர்ட் விரிவாக்கம்: நிலம் அளித்தோருக்கு 1132 கோடி இழப்பீடு

சென்னை: கோவை விமானநிலைய விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக 1132 கோடி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தயானந் கட்டாரியா பிறப்பித்துள்ள அரசாணையில், ‘கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு இழப்பீட்டுத்தொகை வழங்கியது. மீதத்தொகையை வழங்க கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை பரிசீலனை செய்த அரசு 1132 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Coimbatore Airport , Coimbatore Airport
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...