×

வலங்கைமான் குடமுருட்டி சாலையோர பள்ளம்: சீரமைக்க வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

வலங்கைமான்: வலங்கைமானில் வாகன ஓட்டிகளுக்கு மரணபயத்தை ஏற்படுத்தும் சாலையோர மரண பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உண்ணாமுலையம்மன் கோயில் அருகில் இருந்து குடமுருட்டி ஆற்றிற்கு செல்லும் குடமுருட்டி சாலையில் உள்ள வாய்க்கால் பாலம் மதகு கடந்த அதிமுக ஆட்சியில் இடிந்துவிழுந்து பல ஆண்டுகாலமாக பெரும்பள்ளமாக மாறியது.  

இந்த பாதையினை குடமுருட்டி ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் இயங்கிவரும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் செங்கல் காலவாய்கள் மற்றும் விவசாய பணிகள் தொடர்பாக சென்று வரும் கனரக வாகனங்கள் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள இரண்டு அரசு மதுபானக்கடைக்கு செல்லும் மதுப்பிரியர்கள் இந்த சாலையினை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையோர மரண பள்ளத்தில் தினசரி பலர் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலை வலங்கைமான் பேரூராட்சி பராமரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இச்சாலை பள்ளத்தை சீரமைக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என மக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valkyman Gutumuruti Roadside Crater , Valangaiman kudamurutti roadside ditch: urging motorists to align
× RELATED சென்னை ஆவடி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 705 கிராம் தங்கம் மீட்பு..!!