சென்னை: காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யானையின் நடவடிக்கையை வீடியோ பதிவு செய்து தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகள் காட்டில்தான் சிறப்பாக இருக்க முடியும் என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.