சென்னை: சென்னை அண்ணா நகரில் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அண்ணா நகர் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி வைகோ போராட்டம் நடத்தி வருகிறார். ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.