சென்னை: மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த காப்பக நிறுவனர் சிவகுமாருக்கு ஜாமின் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. காப்பக உதவியாளர் மதார்ஷாவின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஆவணங்களை மாற்றி முறைகேடாக பதிவு செய்ததாக குற்றமாட்டப்பட்டுள்ளது. ஆவணங்களை முறைகேடாக தயார் செய்ததில் இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.