சென்னை: தமிழகம் முழுவதும் பிரபல துணி கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போலியான ஆவணங்களை தயாரித்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், கோவை, மதுரையில் தலா 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.