சென்னை: நீட் தேர்வு பயத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும்பத்துக்கு அதிமுக, சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அதேபோன்று, வாணியம்பாடி நகரத்தை சேர்ந்த வசீம் அக்ரம் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதே வேளையில், அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி வழங்கி, அவர்தம் குடும்ப இழப்பிலே தோளோடு தோள் நின்று பங்கெடுத்துக்கொள்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.